Nalladhoru Kudumbam Lyrics
நல்லதொரு குடும்பம் பாடல் வரிகள்
Last Updated: Apr 01, 2023
Movie Name
Thanga Pathakkam (1974) (தங்க பதக்கம்)
Music
M. S. Viswanathan
Year
1974
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Kannadasan
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க
எங்கள் வீடு கோகுலம்
என் மகன் தான் கண்ணனாம்
தந்தை வாசுதேவனோ
தங்கமான மன்னனாம்
எங்கள் வீடு கோகுலம்
என் மகன் தான் கண்ணனாம்
தந்தை வாசுதேவனோ
தங்கமான மன்னனாம்
(நல்லதொரு..)
அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் தந்த்து
அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் தந்த்து
பிள்ளை செல்வம் என்னும் வண்ணம் கண்ணன் பிறந்தான்
நன்றி என்னும் குணம் கொண்டது
நன்மை செய்யும் மனம் கொண்டது
எங்கள் இல்லம் பேரை கண்ணன் வளர்ப்பான்
(நல்லதொரு..)
வெள்ளம் போல ஓடுவான்
வெண்மணல் மேல் ஆடுவான்
கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்
கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்
மாயம் செய்யும் மகன் வந்தது
ஆயர்பாடி பயம் கொண்டது
அந்த பிள்ளை செய்யும் லீலை நானறிவேன்
இந்த பிள்ளை நலம் கொள்ளவும்
என்னைப் பார்த்து எனை வெல்லவும்
கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து
நான் வளர்பேன்
(நல்லதொரு…)
கோலம் கொண்ட பாலனே
கோவில் கொண்ட தெய்வமாம்
தாயில் பிள்ளை பாசமே
தட்டில் வைத்த தீபமாம்
பாசம் என்று எதை சொல்வது
பக்தி என்று எதை சொல்வது
அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா?
பிள்ளை என்னும் துணை வந்தது
உள்ளம் எங்கும் இடம் கொண்டது
இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா?
(நல்லதொரு..)
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க
எங்கள் வீடு கோகுலம்
என் மகன் தான் கண்ணனாம்
தந்தை வாசுதேவனோ
தங்கமான மன்னனாம்
எங்கள் வீடு கோகுலம்
என் மகன் தான் கண்ணனாம்
தந்தை வாசுதேவனோ
தங்கமான மன்னனாம்
(நல்லதொரு..)
அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் தந்த்து
அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் தந்த்து
பிள்ளை செல்வம் என்னும் வண்ணம் கண்ணன் பிறந்தான்
நன்றி என்னும் குணம் கொண்டது
நன்மை செய்யும் மனம் கொண்டது
எங்கள் இல்லம் பேரை கண்ணன் வளர்ப்பான்
(நல்லதொரு..)
வெள்ளம் போல ஓடுவான்
வெண்மணல் மேல் ஆடுவான்
கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்
கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்
மாயம் செய்யும் மகன் வந்தது
ஆயர்பாடி பயம் கொண்டது
அந்த பிள்ளை செய்யும் லீலை நானறிவேன்
இந்த பிள்ளை நலம் கொள்ளவும்
என்னைப் பார்த்து எனை வெல்லவும்
கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து
நான் வளர்பேன்
(நல்லதொரு…)
கோலம் கொண்ட பாலனே
கோவில் கொண்ட தெய்வமாம்
தாயில் பிள்ளை பாசமே
தட்டில் வைத்த தீபமாம்
பாசம் என்று எதை சொல்வது
பக்தி என்று எதை சொல்வது
அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா?
பிள்ளை என்னும் துணை வந்தது
உள்ளம் எங்கும் இடம் கொண்டது
இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா?
(நல்லதொரு..)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.