கடவுள் ஏன் கல்லானான் பாடல் வரிகள்

Last Updated: May 30, 2023

Movie Name
En Annan (1970) (என் அண்ணன்)
Music
K. V. Mahadevan
Year
1970
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே 
கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே

கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி -
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி -
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி 
கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே

சதி செயல் செய்தவன் புத்திசாலி -
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன் -
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் -
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.