Kodaiyila Malai Lyrics
கோடையில மழ பாடல் வரிகள்
Last Updated: Mar 31, 2023
Movie Name
Cuckoo (2014) (குக்கூ)
Music
Santhosh Narayanan
Year
2014
Singers
Vaikom Vijayalakshmi, Yugabharathi
Lyrics
Madhan Karky
கோடையில மழ போல
என்னுயிரே நீயிருக்க
வாடையிலும் அனலாக
வருவேன் உன் கூட
காலை இளங்கதிராக
கண்ணருகே நீ இருக்க
மாலைவரும் நிலவாகி
தொடுவேன் காத்தோட
போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ ?
இன்னும் கோடி சென்மம்
கூட வரும் உறவோ…?
போன…
காரியம் நூறு செய்து
மண்ணில் வாழ்வது பெரிது இல்லை
உந்தன் காலடி தடமறிந்து
செல்லும் பாதைகள் முடிவதில்லை
ஆலயம் தேடி சென்று
செய்யும் பூசைகள் தேவை இல்லை
உன்னதன் கைவிரல் தொடும் பொழுது
துன்பம் தொலைவிலும் வருவதில்லை
உறவெது வடிவெதுவோ? – கொண்ட
உறவுகள் உணர்ந்து தொட !
இருளெது ஒளியெதுவோ? – ரெண்டு
இருதயம் கலந்து விட!
மாறிடும் யாவும் இன்று
சொல்லும் வார்த்தையில் நெசமும் இல்லை
உண்மை காதலை பொருத்தமட்டில்
எந்த மாற்றமும் நிகழ்வதில்லை
ஆசைகள் தீரும் மட்டும்
கொள்ளும் அன்பினில் அழகு இல்லை
வெந்து போகிற வேளையிலும்
அன்பு தீ என்றும் அணைவதில்லை
உறவெது வடிவெதுவோ ? – கொண்ட
உறவுகள் உணர்ந்து தொட !
இருளெது ஒளியெதுவோ ? – ரெண்டு
இருதயம் கலந்து விட!
கோடையில மழ போல….
போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ ?
இன்னும் கோடி சென்மம்
கூட வரும் உறவோ…?
என்னுயிரே நீயிருக்க
வாடையிலும் அனலாக
வருவேன் உன் கூட
காலை இளங்கதிராக
கண்ணருகே நீ இருக்க
மாலைவரும் நிலவாகி
தொடுவேன் காத்தோட
போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ ?
இன்னும் கோடி சென்மம்
கூட வரும் உறவோ…?
போன…
காரியம் நூறு செய்து
மண்ணில் வாழ்வது பெரிது இல்லை
உந்தன் காலடி தடமறிந்து
செல்லும் பாதைகள் முடிவதில்லை
ஆலயம் தேடி சென்று
செய்யும் பூசைகள் தேவை இல்லை
உன்னதன் கைவிரல் தொடும் பொழுது
துன்பம் தொலைவிலும் வருவதில்லை
உறவெது வடிவெதுவோ? – கொண்ட
உறவுகள் உணர்ந்து தொட !
இருளெது ஒளியெதுவோ? – ரெண்டு
இருதயம் கலந்து விட!
மாறிடும் யாவும் இன்று
சொல்லும் வார்த்தையில் நெசமும் இல்லை
உண்மை காதலை பொருத்தமட்டில்
எந்த மாற்றமும் நிகழ்வதில்லை
ஆசைகள் தீரும் மட்டும்
கொள்ளும் அன்பினில் அழகு இல்லை
வெந்து போகிற வேளையிலும்
அன்பு தீ என்றும் அணைவதில்லை
உறவெது வடிவெதுவோ ? – கொண்ட
உறவுகள் உணர்ந்து தொட !
இருளெது ஒளியெதுவோ ? – ரெண்டு
இருதயம் கலந்து விட!
கோடையில மழ போல….
போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ ?
இன்னும் கோடி சென்மம்
கூட வரும் உறவோ…?
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.