நினைவாலே சிலை பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Andaman Kadhali (1978) (அந்தமான் காதலி)
Music
M. S. Viswanathan
Year
1978
Singers
K. J. Yesudas, Vani Jayaram
Lyrics
Kannadasan
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா ஆ... 
திருக்கோவிலே ஓடி வா... 


நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா ஆ... 
திருக்கோவிலே ஓடி வா
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
வேரின்றி மலரே ஏதம்மா 
வேரின்றி மலரே ஏதம்மா


நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா


ஐயா உன் நினைவே தான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
ஐயா உன் நினைவே தான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன்
கன்னத்தில் கோலங்கள்...
கன்னத்தில் கோலங்கள்


செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
திருக்கோவிலே ஓடி வா
ஆ.. திருக்கோவிலே ஓடி வா
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா

முல்லைக்கு குழல் தந்த 
பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்கு தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
முல்லைக்கு குழல் தந்த 
பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்கு தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
அதி காலையில் நான் கேட்பது
நீ பாடும் பூபாளம்
என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி
என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி
செவ்வானமானேன் உனை தேடித் தேடி
திருக்கோவிலே ஓடி வா


ஆ... திருக்கோவிலே ஓடி வா
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா


ஆ...


திருக்கோவிலே ஓடி வா...