நெஞ்சாங்குழி ஏங்குதடி பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Naveena Saraswathi Sabatham (2013) (நவீன சரஸ்வதி சபதம்)
Music
Prem Kumar
Year
2013
Singers
A. V Pooja, Karthik
Lyrics
Vairamuthu
நெஞ்சாங்குழி ஏங்குதடி
நெத்தி பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்காதுடி
உன் நெனப்பு ஓங்குதடி
உள் உசுரு நோகுதடி
கண்ணீர் பட்டு கன்னம் ரெண்டும் வலிக்குதடி

உன்ன விட்டு நான் பிரிஞ்ச வாழ்க்க அத்து போகும்
அழகே கண்ணா விட்டு நீ மறஞ்சா
பார்வை செத்து போகும்
நித்தம் உன்ன எண்ணி எண்ணி
நேரம் வத்திப் போகும் அடியே
சுட்டு விரல் நீண்டு தூரம் செத்து போகும்

அடி உன்ன உன்ன நெனச்சுஎன் உசுர கையில் புடிச்சு
நான் நொந்து வெந்து கெடக்கேன்
சிறு நூலாம் படையா எளச்சு
சிறு நூலாம் படையா எளச்சு

நெஞ்சாங்குழி ஏங்குதடி
நெத்தி பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்காதுடி

அடிக்கிற காத்த நிறுத்தி வாய புடுங்க பாப்பேன்
வண்ண வண்ண சிறு பறவைக போல
உன்ன பத்தி கேப்பேன்
நீ அங்கே எங்கோ நடக்க
அடி இங்கே என் நிலம் துடிக்க
நீ மண்ணில் கண்ணீர் வடிக்க
அது விண்ணைச் சென்று நனைக்க
நீ தேட நான் வாட

அட உன்ன உன்ன நெனச்சு
என் உசுர கையில் புடிச்சு
நான் நொந்து வெந்து கெடக்கேன்
சிறு நூலாம் படையா எளச்சு

நெஞ்சாங்குழி ஏங்கும் ஏங்கும்
நெத்தி போட்டு வீணாய்ப் போகும்
நித்திரைய தொலைச்சா கண்ணு துடி துடிக்கும்

கண்ணுக்குள்ளே உன் முகம் தான்யா
வந்து வந்து போகும்
நெஞ்சு பட்ட பாடு சாமிக்கு சொன்னா
பாரம் கொஞ்சம் தூங்கும்
உன் ஆசிய நெஞ்சில் அழிக்க
நான் அமிலம் ஊத்திக் குடிக்க
உன் நினைவை எப்படி மறக்க
வான் நீலத்தை எது கொண்டு அழிக்க
நீ வாட நான் தேட

என் இரவை எல்லாம் கொளுத்தி
அதை எல்லா திசையிலும் செலுத்தி
நான் உயிரோடுல்லத்தை உணர்த்தி
உயிர் மீட்பேன் உன்னை மலர்த்தி
உயிர் மீட்பேன் உன்னை மலர்த்தி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.