Lyrics
Mayi Mayi Magamayi Lyrics
மாயி மாயி மகமாயி
அவ திருநாளாம் இது திருநாளாம்
திருவிழா இது திருவிழா
பாரி பாரி மொளப் பாரி
இத வளத்தா நல்லத தருவாளாம்
ஒரு விழா இது பெருவிழா
மஞ்ச மொகத்துக்காரி
இவ மங்கலம் தந்திடும் மாரி
பூவலங்காரி இவ பொன்னு கொடுக்கும் சிங்காரி
மாயி மாயி மகமாயி
முத்து பதித்தின ரத்தினத் தேரு சுத்துது வீதியிலே
அந்த வானத்து மேலே வரும் பௌர்ணமி போலே
பக்தி கொடுக்குற உத்தமியே இவ
வந்தது ஆதியிலே அந்த சூரியன் போலே
அந்தச் சந்திரன் போலே
சொக்கி முகம் பாத்தா சொக்கி விழ வேணும்
தப்பு வழி போனா சிக்கிக் கொள்ள வேணும்
தெருவில் நம்ம கோலம் பூக் கோலம்
ஒரு மாவிளக்கு எடுத்து படைக்கலாம்
அம்மன் கோயிலிலே……..(மாயி மாயி)
குத்துவிளக்குல முத்துமணிச் சுடர்
மின்னுற சாடையிலே அந்த
மாப்பிள கண்ணு கண்டு மயங்குது பொண்ணு
சித்திர வந்ததும் நிச்சயம் பண்ணணும் ரத்தினமே ரதியே
நீ ரெண்டுல ஒண்ணு அத மனசுல எண்ணு
தெப்பக் கொள ஓரம் தேடுறது யார
நிதம் நிதம் பாடும் மாமன் அவன் பேர
சிறு பொண்ணு மனசெல்லாம் ஓம் மேல
நான் ஆச வெச்சா கணக்கா நடக்குமே
அம்மனின் கோயிலிலே.....(மாயி மாயி)
People
Related People
3 people