வினையாலே வந்த தீமை பாடல் வரிகள்

Last Updated: Jul 16, 2026

Movie Name
Aasai Magan (1953) (ஆசை மகன்)
Music
S. Dakshinamurthy
Year
1953
Singers
Ghantasala
Lyrics
Kuyilan

வினையாலே வந்த தீமை தனை
நினைந்தே நோவதேனோ
அழுவதாலே ஆவதென்ன
அன்று செய்த வினையாலே

அளவு மீறிய அன்பு செய்தனை
அமுதமே விஷம் ஆகி விட்டது
அதனை நீயும் அறிகிலாயோ..

களிப்புடனே தாலாட்டியே
கருணையோடு பாலூட்டியே
கண்ணின் மணி போலே
இரவு பகல் காத்து வந்த மகனிவனோ

நன்மையெனும் நல்ல விதையாலே-தாயே நீ
உன் மகனை உருவாக்கவிலையே
தீமையெனும் நீரூற்றி பாபமாம் எரு வைத்தே
தாய்மையெனும் பேரன்பு ஒளியினாலே வளர்த்தே

நன்மைகள் அணுகாது வேலியும் தானாகி
நீ காத்து வந்ததின் பலனிதோ தாயே
நீ செய்ததால் வந்த வினையே.....