Kadhal Enbathu Lyrics
காதல் என்பது காவியமானால் பாடல் வரிகள்
Last Updated: Feb 03, 2023
Movie Name
Naalai Namadhe (1975) (நாளை நமதே)
Music
M. S. Viswanathan
Year
1975
Singers
K. J. Yesudas, P. Susheela
Lyrics
Vaali
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
சாகுந்தலம் என்ற காவியமோ
ஒரு தோகையின் வரலாறு
சாகுந்தலம் என்ற காவியமோ
ஒரு தோகையின் வரலாறு
அவள் நாயகன் இன்றித் தனித்திருந்தால்
அந்தக் காவியம் கிடையாது
நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ
நாள் தோறும் படித்தது நினைவில்லையோ
காதல் என்பது காவியமானால் கதா நாயகி வேண்டும்
அந்தக் கதா நாயகி உன்னருகே
இந்தக் கதா நாயகன் வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகி வேண்டும்
நீலக்கடல் கொண்ட நித்திலமே
இந்த நாடகம் உனக்காக
நீலக்கடல் கொண்ட நித்திலமே
இந்த நாடகம் உனக்காக
உந்தன் நீள் விழி தன்னில் திறந்திருக்கும்
இந்த நூலகம் எனக்காக
சிங்காரக் கவிதைகள் படித்தேனம்மா
உனகந்த பொருள் கூறத் துடித்தேனம்மா
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
வள்ளல் தரும் நல்ல நன் கொடை போல்
என்னை வாங்கிய மணிச்சரமே
இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால்
வந்து பாய்ந்திடும் மழைச்சரமே
நீ தீண்டும் இடங்களில் குளிர் வந்தது
தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகி வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
சாகுந்தலம் என்ற காவியமோ
ஒரு தோகையின் வரலாறு
சாகுந்தலம் என்ற காவியமோ
ஒரு தோகையின் வரலாறு
அவள் நாயகன் இன்றித் தனித்திருந்தால்
அந்தக் காவியம் கிடையாது
நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ
நாள் தோறும் படித்தது நினைவில்லையோ
காதல் என்பது காவியமானால் கதா நாயகி வேண்டும்
அந்தக் கதா நாயகி உன்னருகே
இந்தக் கதா நாயகன் வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகி வேண்டும்
நீலக்கடல் கொண்ட நித்திலமே
இந்த நாடகம் உனக்காக
நீலக்கடல் கொண்ட நித்திலமே
இந்த நாடகம் உனக்காக
உந்தன் நீள் விழி தன்னில் திறந்திருக்கும்
இந்த நூலகம் எனக்காக
சிங்காரக் கவிதைகள் படித்தேனம்மா
உனகந்த பொருள் கூறத் துடித்தேனம்மா
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
வள்ளல் தரும் நல்ல நன் கொடை போல்
என்னை வாங்கிய மணிச்சரமே
இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால்
வந்து பாய்ந்திடும் மழைச்சரமே
நீ தீண்டும் இடங்களில் குளிர் வந்தது
தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகி வேண்டும்
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.