இதயத்தில் இருந்து இதழ்கள் பாடல் வரிகள்

Last Updated: Jul 15, 2026

Movie Name
Indru Pol Endrum Vaazhga (1977) (இன்று போல் என்றும் வாழ்க)
Music
M. S. Viswanathan
Year
1977
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Pulamaipithan
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது என்ன கதை
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது காதல் கலை
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை

மார்கழி பூம்பனி குளிர்கள் கொண்டு மாலை சூடியதேன் ஆண்டவன் நீ என்று வணங்கி நின்றேன்
அவள் ஆண்டாள் ஆனதனால்
காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்
உனை கண்டால் பாய்வதென்ன
காலடி ஓசையில் பிறக்கும் இன்பம்
கானம் பாடுவதால் இதயத்தில் இருந்து இதழ்கள் வரை

அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது காதல் கலை

தாமரை கன்னி சூரியன் வந்தால் கனிபோல் ஏன் சிரித்தாள் மங்கல ராணி நீரினில் ஆட
மஞ்சள் தூவியதால் நீ தொடும் வேளையில் கொதிப்பதேன்
எந்தன் நிழலும் சுடுவதென்ன
பெண்மையின் தீபம் கண்களில் ஏந்தி திருநாள் தேடுவதால்

இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது என்ன கதை
அது காதல் கதை