நட்ட நடு ராத்திரியை பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
A Aa E Ee (2009) (அ ஆ இ ஈ)
Music
Vijay Antony
Year
2009
Singers
Sangeetha Rajeshwaran, Karthik
Lyrics
Annamalai
பெண் : நட்ட நடு ராத்திரியை
பட்ட பகல் ஆக்கி விட்டாய்
என் விழியில் நீ விழுந்து
என் தூக்கத்தையும் போக்கி விட்டாய்

கொட்ட கொட்ட நான் முழித்து
கிட்ட தட்ட தூங்கி விட்டேன் என்
கனவில் நீ நுழைந்து என்னை
மீண்டும் மீண்டும் எழுப்பி விட்டாய்

கிட்ட கிட்ட நீயும் வர கெட்ட கெட்ட சொப்பனங்கள்
என்னை சுட்டு பொசுக்குதடா
பற்றிக் கொண்டது என் மனசு
எண்ணை ஊற்றும் உன் வயசு தீ பிடித்து எரியுதடா

ஆண் : நட்ட நடு ராத்திரியை
பட்ட பகல் ஆக்கி விட்டாய்
என் விழியில் நீ விழுந்து
என் தூக்கத்தையும் போக்கி விட்டாய்

ஆண் : பூக்கள் எல்லாம் அட பூக்கள் இல்லை
உன் புன்னகை போல் நான் பார்க்கவில்லை
கடனாய் கொடுப்பாய் உடலை

பெண் : உன் பேச்சினிலே ஒரு நேசம் கண்டேன்
கண் பார்வையிலே ஒரு பாசம் கண்டேன்
உன்னை நான் எனதாய் உணர்ந்தேன்

ஆண் : விழி ஓரமாய் பல
கனவு என்னை மொய்க்குதே
தினம் இரவு உறக்கம் தந்திடு
உறங்கும் நேரத்தில் கனவில் வந்திடு

பெண் : நட்ட நடு ராத்திரியை
பட்ட பகல் ஆக்கி விட்டாய்
என் விழியில் நீ விழுந்து
என் தூக்கத்தையும் போக்கி விட்டாய்

கொட்ட கொட்ட நான் முழித்து
கிட்ட தட்ட தூங்கி விட்டேன் என்
கனவில் நீ நுழைந்து என்னை
மீண்டும் மீண்டும் எழுப்பி விட்டாய்

உன் வார்த்தையிலே என் உயிர் சிலிர்க்கும்
கண் பார்வையிலே பெரும் மழை அடிக்கும்
வயதோ கொதியாய் கொதிக்கும்

ஆண் : உன் நினைவுகளோ
என்னில் படை எடுக்கும் என்
விரல் நுனியோ தொட அடம் பிடிக்கும்
இரவில் உயிரே வெடிக்கும்

பெண் : கடிகாரமாய் எந்தன் மனது
உன்னை சுற்றியே வரும் பொழுது
பிரியமானவா பிறவி நீக்கவா தனிமை நீங்க

ஆண் : நட்ட நடு ராத்திரியை
பட்ட பகல் ஆக்கி விட்டாய்
என் விழியில் நீ விழுந்து
என் தூக்கத்தையும் போக்கி விட்டாய்

பெண் : கொட்ட கொட்ட நான் முழித்து
கிட்ட தட்ட தூங்கி விட்டேன்
என் கனவில் நீ நுழைந்து என்னை
மீண்டும் மீண்டும் எழுப்பி விட்டாய்

ஆண் : கிட்ட கிட்ட நீயும் வர
கெட்ட கெட்ட சொப்பனங்கள் என்னை
சுட்டு பொசுக்குதடா
பற்றி கொண்டது என் மனசு
எண்ணை ஊற்றும் உன் வயசு
தீ பிடித்து எரியுதடா

பெண் : நட்ட நடு ராத்திரியை
பட்ட பகல் ஆக்கி விட்டாய்
என் விழியில் நீ விழுந்து என்
தூக்கத்தையும் போக்கி விட்டாய்