Song lyrics

Arugil Vanthaal Lyrics

அருகில் வந்தாள் உருகி பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
R. Sudharsanam
Year
1960
Singers
A. M. Rajah
Lyricist
Kannadasan

Lyrics

Arugil Vanthaal Lyrics

அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே

மலரே மலரே நீ யாரோ
வஞ்சனை செய்தவர் தான் யாரோ
மலரே மலரே நீ யாரோ
வஞ்சனை செய்தவர் தான் யாரோ
உன்னை சூடி முடித்ததும் பெண் தானோ
பின் தூக்கி எறிந்ததும் அவள் தானோ
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே

இதயம் என்பது ஒரு வீடு
அன்றும் இன்றும் அவள் வீடு
இதயம் என்பது ஒரு வீடு
அன்றும் இன்றும் அவள் வீடு
அது மாளிகை ஆவதும் அவளாலே
பின் மண்மேடானதும் அவளாலே
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people