இதயத்தை ஏதோ பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Yennai Arindhaal (2015) (என்னை அறிந்தால்)
Music
Harris Jayaraj
Year
2015
Singers
Chinmayi
Lyrics
Thamarai
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே

கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே

இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது
என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே

இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே

எனக்கென்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று

இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் என்று

எனக்கென்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று

இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் என்று

மலர்களை அள்ளி வந்து மகிழ்வுடன் கையில் தந்து
மனதினை பகிர்ந்திடவே ஆசை கொள்கின்றேன்

தடுப்பது என்ன என்று தவிக்குது நெஞ்சம் இன்று
நதியினில் இலை என நான் தோய்ந்து செல்கின்றேன்

அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்
ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்

ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல

ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல

இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே

கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே

இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது
என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே

இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே

ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.