ஓடும் ரயிலை போல பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Oru Oorla Rendu Raja (2014) (ஒரு ஊர்ல ரெண்டு ராஜா)
Music
D. Imman
Year
2014
Singers
Abhay Jodhpurkar
Lyrics
Yugabharathi
ஓடும் ரயிலை போல இதயம் மொத்தமாய் ஆடியே போவதென்ன 
மூடு பனியாய் காலை வெயில் போல் வந்து நான் உன்னையும் சேர்வதென்ன 
உன் அழகினை அறிவதும் என்ன 
என் அடிமனம் கரைவதும் என்ன 
உனது செயல் பார்த்தே அசந்தேனே 
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே 
ஓடும் ரயிலை போல இதயம் மொத்தமாய் ஆடியே போவதென்ன 
மூடு பனியாய் காலை வெயில் போல் வந்து நான் உன்னையும் சேர்வதென்ன 

தேனி உன்னை ஈசல் என்று எண்ணி கொண்டு நானிருந்தேன் 
தேவதை நீ என்ற உண்மை சற்று முன்பு தான் அறிந்தேன் 
குட்டை ஒன்று உன்னாலே கங்கை  ஆனதே 
என்னை மன்னிப்பாயா இல்லை தண்டிப்பாயா 
கொஞ்சம் தவறாக உன்னை நினைத்தேனே 
திரு நீரை சாம்பல் பறித்தேனே 
ஓடும் ரயிலை போல இதயம் மொத்தமாய் ஆடியே போவதென்ன 
மூடு பனியாய் காலை வெயில் போல் வந்து நான் உன்னையும் சேர்வதென்ன 

கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஏனோ என்னை காணவில்லை 
கை பிடித்து கூட்டி சென்று வானவில்லை 
ஒற்றை பார்வையாலே எல்லாம் மாறுதே 
மக்கு பயலானேன் முக்தி அடைந்தேனே 
தருதலை தானே தலை நிமிர்ந்தேனே 
விலைவாசி போல உயர்ந்தேனே 

ஓடும் ரயிலை போல இதயம் மொத்தமாய் ஆடியே போவதென்ன 
மூடு பனியாய் காலை வெயில் போல் வந்து நான் உன்னையும் சேர்வதென்ன 
உன் அழகினை அறிவதும் என்ன 
என் அடிமனம் கரைவதும் என்ன 
உனது செயல் பார்த்தே அசந்தேனே 
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.