அன்னமிட்ட கைகளுக்கு பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Iru Malargal (1967) (இரு மலர்கள்)
Music
M. S. Viswanathan
Year
1967
Singers
P. Susheela
Lyrics
Vaali
அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளம் இல்லை மகளே
உள்ளம் இல்லை மகளே

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளம் இல்லை மகளே
உள்ளம் இல்லை மகளே
தாய் வழி நீ நடக்க தந்தை வழி பேரெடுக்க
தாய் வழி நீ நடக்க தந்தை வழி பேரெடுக்க
நான் அதை பார்த்திருக்க நேரம் இல்லை மகளே
நான் அதை பார்த்திருக்க நேரம் இல்லை மகளே
நேரம் இல்லை மகளே

கை விளக்கை ஏற்றி வைத்தேன் கோயிலுக்காக
என் தெய்வத்தின் மேல் எனக்கிருக்கும் காதலுக்காக
கை விளக்கை ஏற்றி வைத்தேன் கோயிலுக்காக
என் தெய்வத்தின் மேல் எனக்கிருக்கும் காதலுக்காக
வாழ்ந்திருந்தேன் அன்பு என்றும் வளர்வதற்காக
ஒரு தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக
தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளம் இல்லை மகளே
உள்ளம் இல்லை மகளே

தாய் குலத்தின் மேன்மை எல்லாம் நீ சொல்ல வேண்டும்
என் கலை மகளே உன் பெருமை ஊர் சொல்ல வேண்டும்
நல்லவர்கள் வாழ்த்துரைக்கும் நாள் வர வேண்டும்
அதை கண் குளிர காண்பதற்கு நான் வர வேண்டும்
கண் குளிர காண்பதற்கு நான் வர வேண்டும்

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளம் இல்லை மகளே
உள்ளம் இல்லை மகளே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.