நாணமோ இன்னும் நாணமோ பாடல் வரிகள்

Last Updated: Sep 23, 2023

Movie Name
Aayirathil Oruvan (1965) (ஆயிரத்தில் ஒருவன்)
Music
Viswanathan Ramamoorthy
Year
1965
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Vaali
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன நாணமோ
நாணமோ

ஓஓ… நாணமோ
இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன்
முன்னே திருநாளை தேடிடும்
பெண்மை நாணுமோ நாணுமோ

நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன நாணமோ
நாணமோ

{ தோட்டத்து
பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும்
சொல்லாதது } (2)

ஆடையில்
ஆடுது வாடையில்
வாடுது ஆனந்த
வெள்ளத்தில் நீராடுது
அது எது

{ ஆடவர் கண்களில்
காணாதது அது காலங்கள்
மாறினும் மாறாதது } (2)

காதலன்
பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை
மூடுவது அது எது

நாணமோ
இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன்
முன்னே திருநாளை தேடிடும்
பெண்மை நாணுமோ நாணுமோ

{ மாலையில்
காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே
மலர்ச்செண்டாவது } (2)

காலையில்
நீரினில் ஆடிடும்
வேளையில் காதலி
எண்ணத்தில் தேனாவது
அது எது

{ உண்டால்
மயக்கும் கல்லாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு
முள்ளாவது } (2)

நாளுக்கு நாள்
மனம் நாடுவது
ஞானியின் கண்களும்
தேடுவது அது எது

நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன நாணமோ
நாணமோ

ஓஓ… நாணமோ
இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன்
முன்னே திருநாளை தேடிடும்
பெண்மை நாணுமோ நாணுமோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.