Song lyrics

Kannazhagu Singarikku Lyrics

கண்ணழகு சிங்காரிக்கு பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
M. S. Viswanathan
Year
1977
Singers
T. M. Soundararajan, Vani Jayaram
Lyricist
Pulamaipithan
Kannazhagu Singarikku

Lyrics

Kannazhagu Singarikku Lyrics

கண்ணழகு சிங்காரிக்கு விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய் இதயத்தையே கொண்டு வந்தேன்
அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே
பொன்னழகு அத்தானுக்கு இளமனதை அள்ளி தந்தேன்
பூவிதழின் ஓசையிலே கதை கதையாய் சொல்ல வந்தேன்
தலைவா வந்தேனே , எனை நான் தந்தேனே

கள்ளவிழி மோகம் என்ன மொழி பேசும்
இன்னும் என்ன நாணம் என்னோடு ?
அஞ்சி நின்ற போது , அன்னை வரும் போது
மெல்ல வரும் தூது கண்ணோடு

பஞ்சனையின் மேடையில் எனை தொடும் அன்பு மனம்
நெஞ்சமெனும் ஊஞ்சலில் தினம் வரும் இன்ப சுகம்
அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே


மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம்
மூன்று தமிழ் சங்கம் இங்கே தான்
தேவி உடலெங்கும் தேனருவி பொங்கும்
ஆசை மனம் எங்கும் அங்கே தான்
தொட்டவுடன் மேனியில் மழைமுகில் மினால் வரும்
துள்ளி வரும் கைகளோ தளிர் உடல் பின்னி வரும்
தலைவா வந்தேனே , எனை நான் தந்தேனே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people