உனை எத்தனை முறை பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Neeya (1979) (நீயா)
Music
Shankar-Ganesh
Year
1979
Singers
P. Susheela, S. P. Balasubramaniam
Lyrics
Kannadasan
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுகராகம் முடிவதில்லை

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

உடலோ அடடா தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
உடலோ அடடா தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்

தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
எதுவரை என்றாலும் இன்னும் இன்னும்
கொஞ்சம் என்பேனே
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு
கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு

ஆடை களைந்து ஆசை கலந்து
ஆடை களைந்து ஆசை கலந்து
அளித்திடும் இன்பங்கள் என்ன என்ன
இன்னும் சொல்வேனோ

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

நி த மா ச ரி தா காதல் கனி நீ
கனி நீ பதமா காமம் தனி நீ
நி த மா ச ரி தா காதல் கனி நீ
கனி நீ பதமா காமம் தனி நீ

பாடும் சுரமோ தேடும் சுகமோ
பாடும் சுரமோ தேடும் சுகமோ
எதுவெனச் சொன்னாலும் இன்பம் இன்பம்
என்னைத் தந்தேனே

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுகராகம் முடிவதில்லை

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.