மானல்லவோ கண்கள் தந்தது பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
Neethikku Pin Paasam (1963) (நீதிக்கு பின் பாசம்)
Music
K. V. Mahadevan
Year
1963
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Kannadasan
மானல்லவோ கண்கள் தந்தது
ஆஹா
மயில் அல்லவோ சாயல் தந்தது
ஓஹோ
தேனல்லவோ இதழைத் தந்தது
ம் ஹும்
சிலையல்லவோ அழகைத் தந்தது

ஆஆஆஆஆஅ
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
தேக்கு மரம் உடலைத் தந்தது
ஆ ஹா
சின்ன யானை நடையைத் தந்தது
ஓஹோ
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
ம் ஹும்
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது

இடையழகு மயக்கம் தந்தது
இசையழகு மொழியில் வந்தது
நடையழகு
ஆ ஆஆ ஒ ஒ ஒ
நடையழகு நடனம் ஆனது
நாலழகும் என்னை வென்றது

தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது

வண்ண மலர் மாலை கொண்டு
வடிவழகைத் தேடி வந்தேன்
வண்ண மலர் மாலை கொண்டு
வடிவழகைத் தேடி வந்தேன்
வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன்
வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன்
இனி வரவும் செலவும் உன்னதேன்று என்னைத் தந்தேன்


மானல்லவோ கண்கள் தந்தது
ஆ ஹா
மயில் அல்லவோ சாயல் தந்தது
ஓஹோ
தேனல்லவோ இதழைத் தந்தது
ம் ஹும்
சிலையல்லவோ அழகைத் தந்தது
ஆஆஆஆஆஅ
தேக்கு மரம் உடலைத் தந்தது
ஆஹா
சின்ன யானை நடையைத் தந்தது
ஓஹோ
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
ம் ஹும்
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.