Song lyrics

Ange Malai Mayakkam Lyrics

அங்கே மாலை மயக்கம் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
M. S. Viswanathan
Year
1967
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyricist
Kannadasan
Ange Malai Mayakkam

Lyrics

Ange Malai Mayakkam Lyrics

அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு

அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

கேட்டுக் கொள்வது காதலில் இனிமை
கேட்டால் தருவது காதலி கடமை
கேட்டுக் கொள்வது காதலில் இனிமை
கேட்டால் தருவது காதலி கடமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை

லாலா…
ஆஹா…

அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people