யார் பெற்ற மகனோ பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Kaththi (2014) (கத்தி)
Music
Anirudh Ravichander
Year
2014
Singers
K. J. Yesudas
Lyrics
Yugabharathi
யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன் 

ஊர் செய்த தவமோ, இந்த ஊர் செய்த தவமோ
மண்ணை காபற்றிடும், இவன் ஆதி சிவன்.

அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்.

கை வீசும் பூங்காத்தே நீ எங்கு போனாயோ
யார் என்று சொல்லாமல் நிழல் போல நடந்தாயோ
முறை தான் ஒரு முறை தான்
உன்னை பார்த்தல் அது வரமே
நினைத்தால் உன்னை நினைத்தால்
கண்ணில் கண்ணீர் மழை வருமே

யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்.

அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ நீ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ கண்ணீரோ

யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்.

by Ponnachipudur Sathiyaraj

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.