மரியாதை உள்ளவன் பாடல் வரிகள்

Last Updated: Apr 20, 2024

Movie Name
Oor Mariyadhai (1992) (ஊர் மரியாதை)
Music
Deva
Year
1992
Singers
K. S. Chitra
Lyrics
Kalidasan
உரிமைக்கு வல்லவன்
உள்ளத்தில் நல்லவன்
அழகுக்கு சந்திரன் அறிவுக்கு சூரியன்
ஊர் போற்றவே......
பேர் கொண்டவன் சீர் கண்டவன்
வீர வாளு மாமன் கையில் பாரு
வீர வாளு மாமன் கையில் பாரு....

மரியாதை உள்ளவன்
மனசும் வயசும் எளசு எளசு
மாமன் எங்க மாமன்....

மாகாளி அம்மன்தான் தாயோட அன்புதான்
மாமாவின் கைகளுக்கு சக்தி தந்தது
செந்தீயாக வந்துதான் ஊர் வாழ நின்றுதான்
வீராதி வீரன் பக்கம் வெற்றி தந்தது
மாணிக்க கல்லு மின்னும் முத்து வாளு
ஞாயத்த சொல்லும் எங்க சக்தி வாளு

ஆண்டாண்டு மக்கள் தரும் ஊர் மரியாதை
அதுதானே எங்க சனம் நம்பி வரும் பாதை
ஆட்டந்தான் வெற்றி பாட்டுத்தான்
ஊரெல்லாம் எங்க வேட்டைத்தான்
நம்மூரு எப்போதும் ஒரு நன்றியுள்ள கூட்டந்தான்

மரியாதை உள்ளவன்
மனசும் வயசும் எளசு எளசு
மாமன் எங்க மாமன்
வருங்கால மன்னவன்
வளரும் பிறை போல் மலரும் அழகன்
மாமன் எங்க மாமன்.....

ஆளான பொண்ணுங்க ஆராத்தி சுத்துங்க
பாராட்டி தட்டுங்கடி பத்து மேளந்தான்
வாடாத சந்தனம் மீனாட்சி குங்குமம்
மாமாவின் நெத்தியில அள்ளிப் பூசுங்க
ஞாயத்துக்கு கட்டுப்பட்ட நல்ல வீரன்தான்
நாடாண்ட கட்டபொம்மன் கொள்ளு பேரன்தான்

கோடான கோடி சனம் கும்புடுற வாளு
வீராதி வீரன் கையில் வந்திருக்கும் நாளு
காலந்தான் நல்ல காலந்தான்
யோகம்தான் நம்ம யோகம்தான்
கொண்டாடு அன்போடு நம் வாழ்வில் நல்ல நேரந்தான்

மரியாதை உள்ளவன்
மனசும் வயசும் எளசு எளசு
மாமன் எங்க மாமன்
வருங்கால மன்னவன்
வளரும் பிறை போல் மலரும் அழகன்
மாமன் எங்க மாமன்

உரிமைக்கு வல்லவன்
உள்ளத்தில் நல்லவன்
அழகுக்கு சந்திரன் அறிவுக்கு சூரியன்

ஊர் போற்றவே......
பேர் கொண்டவன் சீர் கண்டவன்

வீர வாளு மாமன் கையில் பாரு
வீர வாளு மாமன் கையில் பாரு....
வீர வாளு மாமன் கையில் பாரு
வீர வாளு மாமன் கையில் பாரு....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.