Lyrics
Yaar Tharuvar Lyrics
மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி
யார் தருவார் இந்த அரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
அம்மா யார் தருவார் இந்த அரியாசனம்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா
உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா
உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா ஆ..
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா
உன் சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா
மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி
யார் தருவார் இந்த அரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
அம்மா யார் தருவார் இந்த அரியாசனம்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா
உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா
உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா ஆ..
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா
உன் சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா
People
Related People
4 people