Ennena Seithom Lyrics
என்னென்ன செய்தோம் பாடல் வரிகள்
Last Updated: Jun 07, 2023
Movie Name
Mayakkam Enna (2011) (மயக்கம் என்ன)
Music
Yuvan Shankar Raja
Year
2011
Singers
Harish Raghavendra
Lyrics
Selvaraghavan
என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே
எங்கெங்கு போனோம் வந்தோம் விதி என்னும் பேரிலே
காணாத துயரம் கண்ணிலே
ஓயாத சலனம் நெஞ்சிலே
இறைவா சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா
அன்பான புன்னைகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய்
கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள் நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்
வாழ்கையின் பொருள்தான் என்ன
வாழ்ந்துதான் பார்த்தால் என்ன
கதை சொல்கிறாய் பயம் கொள்கிறாய்
காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா
காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா
உனது அரசாங்கம் பெரும் காடு
உலகம் அதிலே ஒரு சிறு கூடு
உன்னை அணைத்து கொண்டு
உள்ளம் மருகி நின்றால்
சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும்
இறைவா சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா
உள்ளிருக்கும் உன்னை தேடி
ஓயாமல் அலைவோர் கோடி
கருவறையா நீ கடல் அலையா
மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்
மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்
என்னில் கடவுள் யார் தேடுகிறோம்
பொய்யாய் அவரின் பின் ஓடுகிறோம்
கண்ணை பார்க்க வைத்த கல்லை பேச வைத்த
பெருந்தாயின் கருணை மறக்கிறோம்
இறைவா சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா
அன்பான புன்னைகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய்
கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள் நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்
எங்கெங்கு போனோம் வந்தோம் விதி என்னும் பேரிலே
காணாத துயரம் கண்ணிலே
ஓயாத சலனம் நெஞ்சிலே
இறைவா சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா
அன்பான புன்னைகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய்
கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள் நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்
வாழ்கையின் பொருள்தான் என்ன
வாழ்ந்துதான் பார்த்தால் என்ன
கதை சொல்கிறாய் பயம் கொள்கிறாய்
காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா
காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா
உனது அரசாங்கம் பெரும் காடு
உலகம் அதிலே ஒரு சிறு கூடு
உன்னை அணைத்து கொண்டு
உள்ளம் மருகி நின்றால்
சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும்
இறைவா சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா
உள்ளிருக்கும் உன்னை தேடி
ஓயாமல் அலைவோர் கோடி
கருவறையா நீ கடல் அலையா
மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்
மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்
என்னில் கடவுள் யார் தேடுகிறோம்
பொய்யாய் அவரின் பின் ஓடுகிறோம்
கண்ணை பார்க்க வைத்த கல்லை பேச வைத்த
பெருந்தாயின் கருணை மறக்கிறோம்
இறைவா சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா
அன்பான புன்னைகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய்
கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள் நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.