ஈரமாய் ஈரமாய் பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Un Samayal Arayil (2014) (உன் சமையல் அறையில் )
Music
Ilaiyaraaja
Year
2014
Singers
Ranjith
Lyrics
Palani Barathi
நாணன நாணன நாணனனா நா நா
நாணன நாணன நாணனனா நா நா

ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு
பாடுவது யார் அங்கே
பாட்டுக்கென்ன பேர் இங்கே
வேண்டுவது யாரோ யாரோ
ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு

தென்றல் செல்கின்ற வழியில் உள்ளம் செல்கின்றது
ஓஹோ தென்றல் செல்கின்ற வழியில் உள்ளம் செல்கின்றது
கள்ள சிரிப்பொன்று வந்து நிற்க சொல்கின்றது
நிற்கவா போகவா கேட்குதே பாதங்கள்
ஆடவா பாடவா ஏனிந்த தாபங்கள்
ஓடும் நதி நீர் மேலே ஓடும் ஒரு பூ போலே
ஓடுதே என் நெஞ்சம் ஏனோ
ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு

கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது
ஏஹே கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது
காற்றில் கேட்காத பாடல் காதில் கேட்கின்றது
தாவரம் போல நான் தனிமையில் வாழ்ந்தேனே
பறவையின் குரலிலே கலவரம் ஆனேனே
தேடல் இங்கு ஓர் இன்பம் தேடுவது தான் துன்பம்
தேட வைத்தது யாரோ யாரோ
ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு
பாடுவது யார் அங்கே
பாட்டுக்கென்ன பேர் இங்கே
வேண்டுவது யாரோ யாரோ
ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.