Ninukori Varnam Lyrics
நின்னுக்கோரி வர்ணம் பாடல் வரிகள்
Last Updated: Jun 07, 2023
Movie Name
Agni Natchathiram (1988) (அக்னி நட்சத்திரம்)
Music
Ilaiyaraaja
Year
1988
Singers
K. S. Chithra
Lyrics
Vaali
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
—
உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டுத் தூங்குது
உன்னோடுநான் ஓயாமல் தேனாற்றிலே நீராடத் நினைக்கையில்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடு காதல் நெஞ்சம்
வன்னப்பாவை மோகனம் வாடிப்போன காரணம்
கன்னித்தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாகக் கொதித்திட
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
—
உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டுத் தூங்குது
உன்னோடுநான் ஓயாமல் தேனாற்றிலே நீராடத் நினைக்கையில்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடு காதல் நெஞ்சம்
வன்னப்பாவை மோகனம் வாடிப்போன காரணம்
கன்னித்தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாகக் கொதித்திட
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.