உச்சி மலையில் ஊர் பாடல் வரிகள்

Last Updated: Apr 27, 2024

Movie Name
Kazhugumalai Kallan (1988) (கழுகுமலை கள்ளன்)
Music
Chandrabose
Year
1988
Singers
Mano, Vani Jayaram
Lyrics
Vaali
பெண் : ஓஓஒ...உச்சி மலையில் ஊர் இருக்க
ஊருக்குள்ள தேர் இருக்க
தேருக்கொரு ராசனத்தான் தேடும்போது
வெக்கம் விட்டு கூப்பிடுமா பூந்தேரு
தேருக்கொரு ராசா நீ வேறாரு

ஆண் : ஓஓஒ...உச்சி மலையில் ஊர் இருக்க
ஊருக்குள்ள தேர் இருக்க
தேரு ஒரு ராசனத்தான் தேடும்போது
தேடுகிற ராசாவும் நானல்ல
காரணத்த என்னவென்று நான் சொல்ல

பெண் : தத்துற தொத்துற சித்திரச் சிட்டு
தொட்டால் என்ன தோஷமா
ஒத்தையில் நிக்கையில் மெத்தையில் இட்டு
முத்தாடினால் பாவமா

ஆண் : வெட்டவெளி பொட்டலிலே..ஏ..ஏ..ஏ..ஓஓஒ.
வெட்டவெளி பொட்டலிலே சுட்டெரிக்கும் கானலிலே
தண்ணி குடிக்க எண்ணியிருக்கும்
மானுக்கொரு மயக்கமா

பெண் : ஓஓஒ...உச்சி மலையில் ஊர் இருக்க
ஊருக்குள்ள தேர் இருக்க
தேருக்கொரு ராசனத்தான் தேடும்போது
ஆண் : தேடுகிற ராசாவும் நானல்ல
காரணத்த என்னவென்று நான் சொல்ல

ஆண் : இப்பவும் எப்பவும் உப்பளம் தன்னில்
பப்பாளி தான் காய்க்குமா
எண்ணிய எண்ணமும் எண்ணிய வண்ணம்
எல்லார்க்கும் தான் வாய்க்குமா

பெண் : நட்டநடு நெத்தியிலே....ஏ...ஏ...ஏ...
நட்டநடு நெத்தியிலே பொட்டெழுதி வச்சவள
கொள்ளையடிக்க கள்ளன் இருக்க
காலம் வந்து தடுக்குமா

ஆண் : ஓஓஒ...உச்சி மலையில் ஊர் இருக்க
ஊருக்குள்ள தேர் இருக்க
தேரு ஒரு ராசனத்தான் தேடும்போது
தேடுகிற ராசாவும் நானல்ல
காரணத்த என்னவென்று நான் சொல்ல

பெண் : ஓஓஒ...உச்சி மலையில் ஊர் இருக்க
ஊருக்குள்ள தேர் இருக்க
தேருக்கொரு ராசனத்தான் தேடும்போது
வெக்கம் விட்டு கூப்பிடுமா பூந்தேரு
தேருக்கொரு ராசா நீ வேறாரு.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.