Raaja Raajathi Lyrics
ராஜா ராஜாதி பாடல் வரிகள்
Last Updated: Mar 28, 2023
Movie Name
Agni Natchathiram (1988) (அக்னி நட்சத்திரம்)
Music
Ilaiyaraaja
Year
1988
Singers
Ilaiyaraaja
Lyrics
Vaali
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டையில்லே கொடியுமில்லே
அப்பவும் நான் ராஜா
(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)
வரவும் செலவும் இரண்டும் இன்றி
வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி
உறவும் பகையும் உண்டு
நெஞ்சம் விளையாடுது நித்தம் இசைபாடுது
எங்கும் சுகமானது எங்கள் வசமானது
விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்
(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)
இடையும் உடையும் இரண்டும் இன்றி
இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி
மானும் மீனும் உண்டு
உள்ளம் அலைபாயுது எண்ணம் அசைபோடுது
கண்கள் வலைவீசுது காதல் விலை பேசுது
விழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்
(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டையில்லே கொடியுமில்லே
அப்பவும் நான் ராஜா
(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)
வரவும் செலவும் இரண்டும் இன்றி
வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி
உறவும் பகையும் உண்டு
நெஞ்சம் விளையாடுது நித்தம் இசைபாடுது
எங்கும் சுகமானது எங்கள் வசமானது
விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்
(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)
இடையும் உடையும் இரண்டும் இன்றி
இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி
மானும் மீனும் உண்டு
உள்ளம் அலைபாயுது எண்ணம் அசைபோடுது
கண்கள் வலைவீசுது காதல் விலை பேசுது
விழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்
(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.