வா வா அன்பே அன்பே பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
Agni Natchathiram (1988) (அக்னி நட்சத்திரம்)
Music
Ilaiyaraaja
Year
1988
Singers
K. S. Chithra, K. J. Yesudas
Lyrics
Vaali
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா..)

நீலம் கொண்ட கண்ணும்
மேகம் கொண்ட நெஞ்சும்
காலம்தோரும் என்னை சேறும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மனி
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீ இன்றி ஏது பூ வைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா..)

கண்ணன் வந்து கொஞ்சும்
கட்டில் இந்த நெஞ்சம்
காணல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும்
உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்
காற்றில் வாங்கும் மூச்சிலும்
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது எந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும்
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது எந்தன் தஞ்சமானது
உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோ மானே
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா..)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.