Oru kaatril alaiyum Lyrics
ஒரு காற்றில் அலையும் சிறகு பாடல் வரிகள்
Movie Name
Naan Kadavul (2009) (நான் கடவுள்)
Music
Ilaiyaraaja
Year
2009
Singers
Ilaiyaraaja
Lyrics
Vaali
ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும் ?
கண்ணில்லாது காணும் கனவு
எதை தேடி எங்கு போகும் ?
எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதெங்கே ?
இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்
ஒரு காற்றில் அலையும் சிறகு..
யார்க்கும் போலொரு அன்னை தந்தை
உனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில் !
ஒளியைப் போலே ஓர் துணை
வந்து சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..
வீதி என்றொரு வீடும் உண்டு
உனக்கது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது
வேலியில்லா சோலைக்காக
வந்ததொரு காவல்
கண்கள் கொண்ட தெய்வமும்
காவலையும் கொண்டு சென்றதேனோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..
எந்த நேரம் ஓய்வு தேடும் ?
கண்ணில்லாது காணும் கனவு
எதை தேடி எங்கு போகும் ?
எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதெங்கே ?
இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்
ஒரு காற்றில் அலையும் சிறகு..
யார்க்கும் போலொரு அன்னை தந்தை
உனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில் !
ஒளியைப் போலே ஓர் துணை
வந்து சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..
வீதி என்றொரு வீடும் உண்டு
உனக்கது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது
வேலியில்லா சோலைக்காக
வந்ததொரு காவல்
கண்கள் கொண்ட தெய்வமும்
காவலையும் கொண்டு சென்றதேனோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.