எங்கிருந்து வந்தாயோ பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Kayal (2014) (கயல்)
Music
D. Imman
Year
2014
Singers
Shreya Ghoshal
Lyrics
Yugabharathi
எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
என்னமோ சொன்னாயே
கத பேசி போனாயே
அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே

எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
என்னமோ சொன்னாயே
கத பேசி போனாயே
அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே

வாசத்தண்ணி தெளிக்கையில
வந்து நீயும் நனைக்கிறியே
துணிமணிய துவைக்கையிலே
என்ன நீயும் புளியுறயே
ஆஞ்சி வச்ச கீர போல
நினைப்புல தான் கரையுரியே
அம்மி வச்ச தேங்கா சில்லா
அடி மனச நசுக்குறியே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ

நடக்கையில தொடர்ந்து வர
வழி நடுவே மறஞ்சுடுவ
தலைமுடிய ஒதுக்கையில
வகிடுக்குள்ள ஒழிஞ்சுடுவ
கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன
கழுவிவிட மனமில்லையே
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன
ஒதர ஒரு வழி இல்லையே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ

உயிரோடு உறைந்தாயே.........

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.