சுகம் தரும் நிலா என்னை பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Sattam Oru Vilaiyattu (1987) (சட்டம் ஒரு விளையாட்டு)
Music
M. S. Viswanathan
Year
1987
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Pulamaipithan

பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : ஹாஹ் மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

பெண் : இளமனம் துடிக்கிறதே
உனை எண்ணி தவிக்கிறதே
ஆண் : இருவரும் இரு துருவம்
இதில் எங்கு உறவு வரும்

பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

ஆண் : மோகத்தை அழித்து விடு எனும்
பாட்டொன்று நான் இன்று கேட்டேன்
பெண் : ஆசைக்கு சிறகு கட்டி நான்
ஆகாயம் எங்கெங்கும் போனேன்

ஆண் : கண்டதோ மின்மினி
அது கையில் விளக்காகுமா
பெண் : வந்ததோ பெளர்ணமி
எந்தன் வானம் இருளாகுமா

பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

பெண் : கூட்டுக்குள் குயில் இருந்து தினம்
உன் காதல் ராகங்கள் பாடும்
ஆண் : வேட்டைக்கு வரும் வழியில் இந்த
ராகங்கள் யாருக்கு வேண்டும்

பெண் : உன்னைத்தான் எண்ணித்தான்
இந்த ஜீவன் துடிக்கின்றது
ஆண் : தன்னையே மறந்து
ஒரு வாழ்க்கை நடக்கின்றது

பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

பெண் : இளமனம் துடிக்கிறதே
உனை எண்ணி தவிக்கிறதே
ஆண் : இருவரும் இரு துருவம்
இதில் எங்கு உறவு வரும்....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.