Song lyrics

Poiyiley Piranthu Lyrics

பொய்யிலே பிறந்து பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
Viswanathan Ramamoorthy
Year
1963
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyricist
Kannadasan
Poiyiley Piranthu

Lyrics

Poiyiley Piranthu Lyrics

பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே -
உம்மைப்புரிந்து கொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்தப் பூவையர் குலமானே..


பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த
பூவையர் குலமானே -
உன்னைப்புரிந்து கொண்டான்
உண்மை தெரிந்து கொண்டான்
இந்தப் புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே -
உம்மைப்புரிந்து கொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்தப் பூவையர் குலமானே..


நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே
வளர்ந்தது ஒரு உருவம்
நேரிலே வந்து மார்பிலே
என்னைஅணைப்பது உன் உருவம்
வெள்ளை உள்ளமே கவிதை வெள்ளமே
காதல் கன்னி உந்தன் சொந்தம்
காதல் கிள்ளையே கையில் பிள்ளையே
இந்த முல்லை உந்தன் சொந்தம்
பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே -
உம்மைப்புரிந்து கொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்தப் பூவையர் குலமானே..


சற்றே சரிந்த குழலே அசைந்து
தாவுது என் மேலே -
அதுதானே எழுந்து மேலே விழுந்து
இழுக்குது வலை போலே
நெற்றிப் பொட்டிலே சூடும் பூவிலே
காணும் யாவுன் எந்தன் சொந்தம்
நெஞ்சத் தட்டிலே என்னைக் கொட்டினேன்
எந்தன் யாவும் உந்தன் சொந்தம்
பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே -
உம்மைப்புரிந்து கொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்தப் பூவையர் குலமானே..
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people