வனத்திலோடிய மானிட வீரனை பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
Jagathalaprathapan (1961) (ஜகதலப் பிரதாபன்)
Music
Pendyala Nageswara Rao
Year
1961
Singers
P. Leela, P. Susheela
Lyrics
Kannadasan

வனத்திலோடிய மானிட வீரனை
எண்ணம் நாடிய விசாரமா
கவனத்திலே அவனை எண்ணி
கண்கள் மலர்ந்தாள் பூப்போலே (வனத்தில்)

தேவி காதலன் மானிட மன்னன்
நவமன் மதனாய் ஆகினான் ஆஹா....
நவமன் மதனாய் ஆகினான்
மன்மதனின் தேர் வேகத்தினாலே
மைவிழி வஞ்சி வாடினாள் – சிறு
மைவிழி வஞ்சி வாடினாள்.....

அழகிய சிலையை நாயகனென்றே
மனதால் நினைந்தே ஆடினாள் – ஆஹா
மனதால் நினைந்தே ஆடினாள்
மனதில் நிறைந்த கன்னியின் கிளியை
மணமகன் மறந்தே ஏகினான் – ஆஹா
மணமகன் மறந்தே ஏகினான்....

சிலையினிலிருன்தோன் பூவை காதலன்
இளைய வசந்தன் ஆகினான் – ஆஹா
இளைய வசந்தன் ஆகினான்
வசந்தனின் சிறு கோயிலைப் பார்த்தே
இந்திரன் மகளே வாடினாள் ஆஹா
இந்திரன் மகளே வாடினாள்......(வனத்தில்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.