நால்வரின் கழுத்திலே நானிட்ட பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Jagathalaprathapan (1961) (ஜகதலப் பிரதாபன்)
Music
Pendyala Nageswara Rao
Year
1961
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan

நால்வரின் கழுத்திலே நானிட்ட மாலையால்
நால்வரென் துணைவியானார்
நடுவிலே நிற்பவர் யாரென்ற போதிலும்
ஏழையென் அன்னையன்றோ...(நால்வரின்)

பிள்ளையைச் சோதிக்க மனைவிபோல் மாறினால்
பெண்மைக்கு முறைமையாமோ
அம்மையே தெய்வமே அன்னையே சற்று நீ
அப்புறம் நகரலாமோ
செல்வமே வாழ்கென்று அன்னையுன் கைகளால்
என்னை நீ வாழ்த்தலாமோ...

கண்ணுக்கு ஒருவராய்க் காட்சி தந்தாலும் நீர்
பெண் மக்கள் நால்வரன்றோ
அம்மையாம் பார்வதி பிள்ளைக்குப் பரிசாக
அளித்தவர் நீவிரன்றோ

பெண்மையின் கற்போடும் பத்தினிப் பண்போடும்
பிறந்ததே உண்மையானால்
உண்மையாம் வடிவத்தை கணவனின் எதிரிலே
உலகுக்குக் காட்டுவீரோ....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.