வண்ணக்கிளி சொன்ன பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Dheiva Thaai (1964) (தெய்வத் தாய்)
Music
Viswanathan Ramamoorthy
Year
1964
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Vaali
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..

வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..

பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ -
அதைத்தொட்டு விடத் துடிப்பதிலே என்ன சுகமோ
கன்னி மன மாளிகையில் காவல் நிற்கவா ? -
அங்கேகாவல் நின்ற மன்னவனை கைப் பிடிக்க வா..

வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..

அத்திப் பழக் கன்னத்திலே கிள்ளி விடவா -
இந்தஊரையெல்லாம் நான் அழைத்துச் சொல்லி விடவா
அல்லி விழி துள்ளி விழ கோபம் என்னவோ -
இங்கேஅஞ்சி அஞ்சி கொஞ்சுவதில் லாபம் என்னவோ...

வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.