கன்னி ஒருத்தி மடியில் பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Neerum Neruppum (1971) (நீரும் நெருப்பும்)
Music
M. S. Viswanathan
Year
1971
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Vaali
கன்னி ஒருத்தி மடியில்
காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்
கன்னி ஒருத்தி ஒருத்தி மடியில்
காளை காளை காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்


காலைப்பொழுதும் விடிய
காதல் முழுதும் முடிய
சுவை சுவையாய் அள்ளி தந்தாள்
கன்னி ஒருத்தி மடியில்
காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்



சொல்லி சொல்லி முடித்துவிட்டான்
அதை சொல்லும் வரை துடிக்க விட்டான்
சொல்லி சொல்லி முடித்துவிட்டான்
அதை சொல்லும் வரை துடிக்க விட்டான்
பெண்மை என்னும் பூவும் கொஞ்சம்
மென்மை மாறி போகும் வண்ணம்
பெண்மை என்னும் பூவும் கொஞ்சம்
மென்மை மாறி போகும் வண்ணம்
கன்னி ஒருத்தி மடியில்
காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்

செவ்விழனி சாரெடுத்து கொடுத்தாளோ
தன்னை ஒரு தென்னை என நினைத்தாளோ
செவ்விழனி சாரெடுத்து கொடுத்தாளோ
தன்னை ஒரு தென்னை என நினைத்தாளோ
இதழ்களை இதழ் கொண்டு மறைத்தாளோ
ஈரெட்டு வயதினில் மலர்ந்தாளோ
தேனருவி சாரென நினைத்தானோ
தொட்டு தொட்டு பட்டுடலை நனைத்தானோ
கடலினில் படகென மிதந்தானோ
காலத்தை காதலில் மறந்தானோ
கன்னி ஒருத்தி மடியில்
காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்

கொத்து மலர் பூங்குழலை மெத்தைப்போலே
கொண்டு வந்த வஞ்சி மகள் நெஞ்சின் மேலே
கொத்து மலர் பூங்குழலை மெத்தைப்போலே
கொண்டு வந்த வஞ்சி மகள் நெஞ்சின் மேலே
மணிவிழி மயங்கிட கிடந்தானோ
மேனியை கைகொண்டு அளந்தானோ
மூங்கிலிலை காடிருக்கும் இடம் பார்த்து
மெல்லிடையை அள்ளுகிற கரம் சேர்த்து
மூங்கிலிலை காடிருக்கும் இடம் பார்த்து
மெல்லிடையை அள்ளுகிற கரம் சேர்த்து
கலைகளை பழகிட துணிந்தானோ
காவிய பூமகள் துவண்டாளோ
கன்னி ஒருத்தி மடியில்
காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.