Chinna Kanniley Lyrics
சின்ன கண்ணிலே பாடல் வரிகள்
Last Updated: Jul 14, 2026
Movie Name
Dhoni (2012) (தோணி)
Music
Ilaiyaraaja
Year
2012
Singers
Naresh Iyer, Shreya Ghoshal
Lyrics
Na. Muthukumar
சின்னக் கண்ணிலே என்ன கேட்கிறாய்
என் நெஞ்சின் கதைகளைப்
பிண்ணி வலைகளாய் வீசினாய்
இந்த புன்னகை எங்கு வாங்கினாய்
நீ தினமும் பூப்பதால்
நேற்று நாளையைத் தாண்டினாய்
இரு கை நீட்டி
சிறு தலையாட்டி
இரு விழியாலே
புது ஒளி கூட்டி
நான் வாழ வந்ததின்
அர்த்தம் சொல்கிறாய் கண்மணி
வைரமணிகளை சிரித்துத் தெளிக்கிறாய்
மழலைப் பூவே வா
புதியது குழந்தை உலகம்
நுழைந்திட வழிகள் வேண்டும்
குழந்தையின் வயதும் மனதும்
கிடைத்திட வரங்கள் வேண்டும்
ஒரு தீவில் பூக்கும்
சிறு பூவைப் போலே
இதழை திறந்து பேசும்
உனது மழலை போதும்
உன் மொழி தேன்மொழி
என் மொழி வீண்மொழி
உன்னிடம் உள்ளது தெய்வத்தின் தாய்மொழி
அந்த ஆகாயம் இந்த பூலோகம்
அதைப் பிஞ்சுவிரல்களால் தாங்கிப் பிடிக்கிறாய் எப்படி?
நடைவண்டி பழகும் வயதில்
நடந்திட நானும் முயன்றேன்
நடந்திட கடந்த தூரம்
உனக்கது தொடர வேண்டாம்
இந்த உலகின் அழகை
நீ அழகு செய்தாய்
உன் சிரிப்பின் ஒளியில்
இரவை வெளிச்சம் செய்தாய்
உன்னிடம் பாடல்கள் எத்தனை உள்ளது
என்னிடம் கேள்விகள் மட்டுமே உள்ளது
சிறுகை தீண்டி என் மெய் தீண்டி
என் கர்வம் யாவையும் தீர்த்துப் போகிறாய் எப்படி?
என் நெஞ்சின் கதைகளைப்
பிண்ணி வலைகளாய் வீசினாய்
இந்த புன்னகை எங்கு வாங்கினாய்
நீ தினமும் பூப்பதால்
நேற்று நாளையைத் தாண்டினாய்
இரு கை நீட்டி
சிறு தலையாட்டி
இரு விழியாலே
புது ஒளி கூட்டி
நான் வாழ வந்ததின்
அர்த்தம் சொல்கிறாய் கண்மணி
வைரமணிகளை சிரித்துத் தெளிக்கிறாய்
மழலைப் பூவே வா
புதியது குழந்தை உலகம்
நுழைந்திட வழிகள் வேண்டும்
குழந்தையின் வயதும் மனதும்
கிடைத்திட வரங்கள் வேண்டும்
ஒரு தீவில் பூக்கும்
சிறு பூவைப் போலே
இதழை திறந்து பேசும்
உனது மழலை போதும்
உன் மொழி தேன்மொழி
என் மொழி வீண்மொழி
உன்னிடம் உள்ளது தெய்வத்தின் தாய்மொழி
அந்த ஆகாயம் இந்த பூலோகம்
அதைப் பிஞ்சுவிரல்களால் தாங்கிப் பிடிக்கிறாய் எப்படி?
நடைவண்டி பழகும் வயதில்
நடந்திட நானும் முயன்றேன்
நடந்திட கடந்த தூரம்
உனக்கது தொடர வேண்டாம்
இந்த உலகின் அழகை
நீ அழகு செய்தாய்
உன் சிரிப்பின் ஒளியில்
இரவை வெளிச்சம் செய்தாய்
உன்னிடம் பாடல்கள் எத்தனை உள்ளது
என்னிடம் கேள்விகள் மட்டுமே உள்ளது
சிறுகை தீண்டி என் மெய் தீண்டி
என் கர்வம் யாவையும் தீர்த்துப் போகிறாய் எப்படி?