Pooyum Pooyum Lyrics
போயும் போயும் பாடல் வரிகள்
Last Updated: Apr 01, 2023
Movie Name
Thaai Sollai Thattadhe (1961) (தாய் சொல்லைத் தட்டாதே)
Music
K. V. Mahadevan
Year
1961
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே இறைவன்
புத்தியைக் கொடுத்தானே அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே மனிதன்
பூமியைக் கெடுத்தானேபோயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
கண்களிரண்டில் அருளிருக்கும் சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
கண்களிரண்டில் அருளிருக்கும் சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது
உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்
பாயும் புலியின் கொடுமையை இறைவன்
பார்வையில் வைத்தானே புலியின்
பார்வையில் வைத்தானே இந்தப்
பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே இதயப்
போர்வையில் மறைத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
கைகளைத் தோளில் போடுகிறான் அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்
கைகளைத் தோளில் போடுகிறான் அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான் கையில்
பட்டதை எடுத்து ஓடுகிறான்
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே இறைவன்
புத்தியைக் கொடுத்தானே அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே மனிதன்
பூமியைக் கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
புத்தியைக் கொடுத்தானே இறைவன்
புத்தியைக் கொடுத்தானே அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே மனிதன்
பூமியைக் கெடுத்தானேபோயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
கண்களிரண்டில் அருளிருக்கும் சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
கண்களிரண்டில் அருளிருக்கும் சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது
உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்
பாயும் புலியின் கொடுமையை இறைவன்
பார்வையில் வைத்தானே புலியின்
பார்வையில் வைத்தானே இந்தப்
பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே இதயப்
போர்வையில் மறைத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
கைகளைத் தோளில் போடுகிறான் அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்
கைகளைத் தோளில் போடுகிறான் அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான் கையில்
பட்டதை எடுத்து ஓடுகிறான்
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே இறைவன்
புத்தியைக் கொடுத்தானே அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே மனிதன்
பூமியைக் கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.