Angiyodu Nijaar Aindhu Lyrics
அங்கியோடு நிஜாரணிந்தே பாடல் வரிகள்
Last Updated: Jun 02, 2023
அங்கியோடு நிஜாரணிந்தே வந்தாயே
உந்தன் இளமை காட்டி ஆசை தந்தாயே
எந்தன் பின்னே நீ தொடர்ந்து ஆடாதே
டாணாக்காரன் கையில் சிக்கி வாடாதே
கணம் கணம் உனை கண்டிடவும்
மனம் துடித்திடுதே மதன் கணையால்
வருவேன் நான் உன் பின்னே
கைவிலங்கு வந்தாலும் நிலை தளறேன்
யார்க்கும் நான் அஞ்சேனே
உந்தன் இளமை காட்டி ஆசை தந்தாயே.(எந்தன்)
மதிப்பும் கொண்டவள் நானே
பொது மகளென நீ எண்ணாதே
படே படே பயில்வானை
அஞ்சியே கெஞ்சச் செய்தேன்
கேலி செய்யக் கூடாதே
டாணாக்காரன் கையில் சிக்கி வாடாதே..(அங்கியோடு)
ரூபம் நோக்கினால் எந்தன்
மனதினிலோ காதல் சுடுதே...
செந்தாமரை கையாலே சற்று
நீக்கிடு பட்டு முகத்திரையே...
விழியாலெனைப் பாராயோ
உந்தன் இளமை காட்டி ஆசை தந்தாயே...(எந்தன்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.